tamilnadu

img

புதிய 20 ரூபாய் நோட்டுகள் - ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது

புதிய 20 ரூபாய் நோட்டுகளில் ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் கையெழுத்துடன் வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு எடுத்துள்ளது. 

கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி இரவு 12 மணிக்கு பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பதாக பிரதமர் மோடி அறிவித்தார். அதனைத் தொடர்ந்து புதிய 2000, 500 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டது. இதனையடுத்து புதிய 10, 50 மற்றும் 100 ரூபாய் நோட்டுகளும் அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. 

இந்நிலையில், ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் கையெழுத்துடன், தற்போது புதிய 20 ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கி வெளியிட உள்ளது. இந்த 20 ரூபாய் நோட்டு, பச்சை மற்றும் மஞ்சள் கலந்த நிறத்தில் உள்ளது. நாட்டின் கலாச்சார பாரம்பரியத்தை விவரிக்கும் வகையில் நோட்டின் பின்புறத்தில் எல்லோரா குகைகளின் உருவத்துடன் கூடிய புதிய 20 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த புதிய 20 ரூபாய் நோட்டுகள் விரைவில் புழக்கத்துக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. புதிய நோட்டுகள் வெளியிட்டாலும், பழைய நோட்டுகளும் புழக்கத்தில் இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.


;